சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெற்ற பிளஸ்-2 இரண்டாம் ஆண்டு துணை தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்கு உரிய விடைத்தாளின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த பின்பு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அதே இணையதளம் முகவரியில் சென்று உரிய விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மறு மதிப்பீட்டிற்கு கட்டணமாக பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ. 505-ம், மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ. 305-ம் மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ. 205-ம் செலுத்த வேண்டும். கட்டணங்களை அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டுமென அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to Chat