சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில்இன்று பேரூராட்சி கூட்டம்பேரூராட்சி மன்ற தலைவர் நஜுதீன் தலைமையில் செயல் அலுவலர் கோபிநாத் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். 

இந்த கூட்டத்தில் இளையான்குடியில் சுமார் 4 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்துக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி முடிவடைந்து புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் , புதிய பேருந்து நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெயர் வைக்க வேண்டும் என இளையான்குடி பேரூராட்சியில் பேருராட்சி துணைத் தலைவர் இப்ராகிம்கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையைமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். பின்னர் செயல் அலுவலர் தெரிவிக்கையில் முறையாக அரசின்கவனத்திற்கு கொண்டு போய் இதை செயல்படுத்தலாம் என கூறினார். கூட்டத்தில் மற்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நடைபெற்று வரும் வேலைகள் குறித்து விளக்கம் கேட்டனர்.

இந்த நிகழ்வில் பேரூராட்சி தலைவர் நஜிமுதீன் செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்

Click to Chat